தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இந்த அதிரடி மாற்றங்களுடன் கூடிய பட்டியல் வெளியாகியுள்ளது. இறந்த வாக்காளர்கள், இரட்டைப் பதிவுகள் மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களை நீக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் திருத்த பணிகளால் பல மாவட்டங்களில் வாக்காளர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
கோவை: சுமார் 6.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சேலம்: 3.62 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி: 3.31 லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கம்.
திண்டுக்கல்: 3.24 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல்: 1.93 லட்சம் பேர் நீக்கம்.
தகுதியுள்ள புதிய வாக்காளர்கள் பெயர்களை சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இந்த புதிய வரைவு பட்டியல் தற்போது பொதுமக்கள் பார்வைக்கு கிடைக்கிறது.