Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?

Siva
திங்கள், 21 ஜூலை 2025 (13:21 IST)
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை கிரீம்ஸ் ரோடு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் தமிழக மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
முதல்வர் மு.க. ஸ்டாலின் தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், இன்று  காலை நடைப்பயிற்சியின் போது அவருக்கு திடீரென லேசான உடல்நலக் குறைவு மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டதாக தெரிகிறது.
 
இதனை அடுத்து, அவர் உடனடியாகக் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "காலையில் நடைப்பயிற்சியின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் மருத்துவ பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குச் சில மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் நாளே எதிர்க்கட்சிகள் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு.. டிரம்ப் கருத்துக்கு விளக்கம் கோரி ஆர்ப்பாட்டம்..!

பாகிஸ்தான் அதிபர் ஆகிறாரா அசீம் முனீர்? பிரதமருக்கு தெரியாமல் செல்லும் சுற்றுப்பயணம்..!

2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு.. .. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை..!

சசி தரூரை ஓரங்கட்டும் கேரள காங்கிரஸ்: மோடியை புகழ்ந்ததால் வெடித்த மோதல்!

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments