Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லோர்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

Siva
வெள்ளி, 14 மார்ச் 2025 (14:37 IST)
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. இதில், 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் வாசிப்பு சுமார் 2 மணி 38 நிமிடங்கள் நீடித்தது.
 
பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "இந்த ஆண்டு பட்ஜெட், தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது" என கூறினார்.
 
மகளிர் நலன், தொழில் முன்னேற்றம், இளைஞர்களுக்கான உயர்தொழில்நுட்ப வசதிகள், தொழிற்பூங்காக்கள், புதிய நகரங்கள், புதிய விமான நிலையங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் அதிவேக ரயில் சேவையை உருவாக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
"எல்லோர்க்கும் எல்லாம்" என்ற உயரிய நோக்கில், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்" எனவும் முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments