Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெப்பசலனம் காரணமாக 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வெப்பசலனம் காரணமாக 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
, புதன், 23 ஜூன் 2021 (10:29 IST)
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில், தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோடியாய் ஏறிய தங்கம் & வெள்ளி விலை!!