Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்.. புதிய தேதி என்ன?

Mahendran
செவ்வாய், 6 மே 2025 (11:09 IST)
12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து கடந்த சில நாட்களாக வினா தாள்கள் திருத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
 
இந்த நிலையில் தற்போது வினாத்தாள் திருத்தும் பணி முடிவு பெற்று, மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனை அடுத்து நாளை மறுநாள், அதாவது மே 8ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வு துறை அறிவித்துள்ளது.
 
முன்னதாக மே 9ஆம் தேதி 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு நாளைக்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்வு துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே! 17 வருடம் கழித்து மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்!

தேஜஸ்வி யாதவை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யின் மனைவிக்கும் இரட்டை வாக்காளர் அட்டை!

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments