Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்து மாதங்களுக்கு பின் பிசியான தி.நகர்: கடைகளில் குவிந்த கூட்டம்!

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (19:53 IST)
ஐந்து மாதங்களுக்கு பின் பிசியான தி.நகர்
தினந்தோறும் பிசியாக இருக்கும் சென்னை திநகர் மற்றும் பாண்டிபஜார் பகுதிகளில் கடந்த 5 மாதங்களாக வெறிச்சோடிக் கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஒரு கடைகள் கூட இந்த பகுதியில் திறக்கப்படாததால் பொதுமக்களும் வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் 
 
இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் பெரும்பாலும் தளர்வுகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து திநகர் வழக்கம் போல் மீண்டும் பிசியாகி உள்ளது. நேற்று ஞாயிறு அன்று சென்னை திநகரில் உள்ள பஜார் குறிப்பாக ரங்கநாதன் தெருவில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது 
 
அதே போல் பாண்டிபஜாரில் உள்ள அனைத்து கடைகளும் நேற்றும் இன்றும் பிசியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டதாகவே கருதப்படுகிறது.  மேலும் கொரோனா வைரஸ் சென்னையில் உச்ச கட்டத்தை தாண்டி இறங்கு முகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால் சென்னை மக்கள் அச்சமின்றி வெளியே வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments