Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐந்து மாதங்களுக்கு பின் பிசியான தி.நகர்: கடைகளில் குவிந்த கூட்டம்!

ஐந்து மாதங்களுக்கு பின் பிசியான தி.நகர்: கடைகளில் குவிந்த கூட்டம்!
, திங்கள், 7 செப்டம்பர் 2020 (19:53 IST)
ஐந்து மாதங்களுக்கு பின் பிசியான தி.நகர்
தினந்தோறும் பிசியாக இருக்கும் சென்னை திநகர் மற்றும் பாண்டிபஜார் பகுதிகளில் கடந்த 5 மாதங்களாக வெறிச்சோடிக் கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஒரு கடைகள் கூட இந்த பகுதியில் திறக்கப்படாததால் பொதுமக்களும் வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் 
 
இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் பெரும்பாலும் தளர்வுகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து திநகர் வழக்கம் போல் மீண்டும் பிசியாகி உள்ளது. நேற்று ஞாயிறு அன்று சென்னை திநகரில் உள்ள பஜார் குறிப்பாக ரங்கநாதன் தெருவில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது 
 
அதே போல் பாண்டிபஜாரில் உள்ள அனைத்து கடைகளும் நேற்றும் இன்றும் பிசியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டதாகவே கருதப்படுகிறது.  மேலும் கொரோனா வைரஸ் சென்னையில் உச்ச கட்டத்தை தாண்டி இறங்கு முகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால் சென்னை மக்கள் அச்சமின்றி வெளியே வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியரை கொலை செய்தவரை அடித்தே கொன்ற ஊர்ப்பொதுமக்கள்!