சுவாதி கொலை வழக்கில், அவரை கொன்ற பின், கொலையாளி கையில் கத்தியுடன் அங்கிருந்து தப்பி ஓடும் 17 நிமிட வீடியோ போலீசாருக்கு கிடைத்துள்ளது.
சுவாதி கொலை வழக்கில் போலீசாருக்கு துருப்பு சீட்டாக கிடைத்திருப்பது வீடியோ காட்சிகள் மட்டுமே. தற்போது கொலையாளி பற்றிய சில வீடியோக்கள் கிடைத்துள்ளது. அதாவது கொலையாளி, கடந்த 24ஆம் தேதி காலை 6.32 மணியில் இருந்து 6.47 மணி வரை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்துள்ளான். சரியாக 6.32 மணிக்கு அவன் ரயில் நிலையத்தில் நுழைந்துள்ளான். அந்த காட்சி அருகில் உள்ள வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அதன்பின், அவன் சுவாதியை கொலை செய்துவிட்டு, 2வது தண்டவாளத்தில் இருந்து குதித்து, தண்டவாளம் வழியாக ஓடி, முதல் நடைமேடையில் கொலையாளி ஏறி வேகமாக ஓடும் காட்சிகள் கிடைத்துள்ளது.
அவன் இடது கையில் கத்தியுடன் வேகமாக ஓடும் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது. அப்போது அவனுக்கு எதிர் திசையில் நடந்து வரும் வாலிபர் ஒருவர், அவனை அதிர்ச்சியுடம் மிரண்டு போய் பார்க்கிறார். அதன்பின் மூன்று முறை அந்த வாலிபர், கொலையாளியை திரும்பி பார்க்கும் காட்சிகளும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
கொலையாளியை நேரில் பார்த்த அந்த வாலிபர் யார் என்பது பற்றியும் விசாரனை நடத்துப்பட்டு வருவதாக தெரிகிறது.