Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுவாதியுடன் பேஸ்புக்கில் நிறைய பேசியிருக்கிறேன்: ராம்குமார்

Advertiesment
சுவாதியுடன் பேஸ்புக்கில் நிறைய பேசியிருக்கிறேன்: ராம்குமார்
, வெள்ளி, 15 ஜூலை 2016 (08:30 IST)
3 நாள் போலீஸ் காவலில் இருக்கும் ராம்குமாரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது ராம்குமார் தான் சுவாதியுடன் பேஸ்புக்கில் நிறைய பேசி இருப்பதாக கூறியுள்ளார்.


 
 
சுவாதியை பார்த்த உடன் ஈர்ப்பு ஏற்பட்டு அவர் பின்னால் சுற்றியதாகவும், காதலை ஏற்காமல் அசிங்கமாக திட்டியதால் சுவாதியை மிரட்ட அரிவாளால் வெட்டியதாகவும் ராம்குமார் கூறினார்.
 
மேலும் சுவாதி உங்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி இருக்கிறாரா? என காவல்துறை கேள்வி கேட்டது. அதற்கு பதில் அளித்த ராம்குமார், ஆமாம், பேஸ்புக் மூலம் நிறைய பேசி இருக்கிறோம் என கூறினார்.
 
சுவாதியை பின் தொடர்ந்ததாக கூறிய ராம்குமார் அவரிடம் பேஸ்புக்கில் பேசியதாக கூறியுள்ளார். ஆனால் தன்னை ஒருவர் பின் தொடர்ந்து வருகிறார், அவர் யார் என்பது எனக்கு தெரியவில்லை என சுவாதி தனது நட்பு வட்டாரத்தில் கூறியுள்ளார்.
 
சுவாதியின் பேஸ்புக், அல்லது ராம்குமாரின் பேஸ்புக்கை காவல்துறை ஆராய்ந்தால் இருவரும் பேஸ்புக்கில் பேசினார்களா அல்லது ராம்குமார் பொய் சொல்கிறாரா என்பது தெரியவரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்போன் திருடியவர், கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி