Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் சிறைச்சாலையின் மேல் ட்ரோன் பறந்ததை அடுத்து, கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Mahendran
புதன், 5 மார்ச் 2025 (10:00 IST)
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் பெண்களுக்கான சிறைச்சாலை உள்ளது. அந்த சிறைச்சாலை மீது நேற்று இரவு நேரத்தில், ஒரு ட்ரோன் இரண்டு முறை சுற்றி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
முதலில், இந்த ட்ரோன் பறந்ததை  சிறை ஊழியர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். ஆனால், அந்த ட்ரோன் மீண்டும் மீண்டும் அதே இடத்தில் பறந்து, சிவப்பு மற்றும் பச்சை விளக்குகளை ஒளிரச் செய்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, சிறை ஊழியர்கள் காவல்துறைக்கு புகார் அளித்தனர்.
 
தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். பொதுவாக, திருமணம் அல்லது ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகள் நடந்தால், ட்ரோன் மூலம் வீடியோ எடுத்தல் வழக்கம். ஆனால், அந்த சிறைச்சாலை அருகே எந்த திருமணமும் நடைபெறவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது.
 
இதனால், அந்த ட்ரோன் ஏன் பறந்தது? அதை இயக்கியவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments