Publish Date: Wed, 20 Oct 2021 (17:33 IST)
Updated Date: Wed, 20 Oct 2021 (17:40 IST)
பிரேக்கிங் நியூஸ் என்பது இதுதானா? ஊடகங்களுக்கு பாஜக பிரமுகர் கேள்வி!
பிரேக்கிங் நியூஸ் என்பது இதுதானா என ஊடகங்களுக்கு பாஜக பிரமுகர் எஸ் எஸ்ஜி சூர்யா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கடந்த பல வருடங்களாக குற்றச்சாட்டில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட அண்ணாமலை பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் போது கோபாலபுரம் என்று கூறினால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது என சன் டிவி செய்தியாளரை பார்த்து கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் பிரேக்கிங் நியூஸ் என்பது இதுதானா என பாஜக பிரமுகர் எஸ்ஜி சூர்யா அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழக பா.ஜ.க தலைவர் சகோதரர் திரு. அண்ணாமலை தி.மு.க அரசு/அமைச்சர்கள் மீது வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை குறித்து மூச்சே விடாத தமிழக ஊடகங்கள், அதற்கு எதிர்வினையாக தி.மு.க தரப்பில் இருந்து வரும் பதில்களை மட்டும் பிரேக்கிங் நியூஸ்களாக முக்கியத்துவம் கொடுத்து முந்தி வெளியிடுவது ஏனோ? என்று குறிப்பிட்டுள்ளார்.