Publish Date: Mon, 14 Nov 2022 (14:13 IST)
Updated Date: Mon, 14 Nov 2022 (14:14 IST)
யூடியூபர் மாரிதாஸ்க்கு எதிராக தமிழக அரசின் காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
மாரிதாஸ் பதிவ் உ செய்த ஒரு வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து தமிழக அரசின் காவல்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்தது.
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு பதிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் 13ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது யூடியூபர் மாரிதாஸ்க்கு எதிரான தமிழக போலீஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.