Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (16:58 IST)
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்கில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே நடந்த விசாரணை முறையாக விசாரிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது 
 
இதனையடுத்து இந்த வழக்கு ஆரம்பத்திலிருந்து மீண்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கை காவல்துறையினர் மறுவிசாரணை செய்ய தடை விதிக்க வேண்டும் என அனுபவ் ரவி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்
 
இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்றுமுன் இது குறித்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் காவல்துறை மறு விசாரணைக்கு தடை இல்லை என உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட் அனுபவ் ரவியின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து கொடநாடு கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments