Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் திறக்கப்படுகிறதா ஸ்டெர்லைட் ஆலை? சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் கருத்தால் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (08:05 IST)
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக ஸ்டெர்லைட் ஆலை மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அந்த ஆலை தமிழ்நாடு அரசால் மூடப்பட்டது என்பது தெரிந்தது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையின் போது சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிக்க ஆலை நிர்வாகம் தயாராக இருக்கிறது என்றும் ஆனால் தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காக ஆலையை திறக்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது என்றும் ஸ்டெர்லைட் ஆலையின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இதனை அடுத்து கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை தேசிய சொத்து என்றும் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஆலை செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான பரிந்துரைகளை வழங்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் இந்த கருத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments