Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராடி வரும் விவசாயிகள் மீது தேசப் பாதுகாப்பு சட்டம்: காவல்துறையின் அதிரடி அறிவிப்பு..!

Siva
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (08:00 IST)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஹரியானா மாநில விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் போராடிவரும் விவசாயிகள் மீது தேச பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அம்பாலா காவல்துறை இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில் ஷம்பு என்ற பகுதியின் எல்லையில் போராடிவரும் விவசாய சங்கங்களின் தலைவர்களை தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு நபரை 12 மாதங்கள் வரை காரணம் இன்றி தடுத்து வைக்க முடியும் என்றும் ஒரு நபரை இந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளதாக மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராடிவரும் நிலையில் இந்த போராட்டத்தை நசுக்கும் வகையில் அவர்கள் மீது தேச பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது கொடூரமானது என விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அம்பாலா காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments