Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளன் விடுதலை: ஆளுனருக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுத்த உச்சநீதிமன்றம்!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (12:08 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்ய தாக்கல் செய்த வழக்கில் இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
இந்த வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்தில் வழங்கப்படும் என்றும் பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்படும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூடி கடந்த 2018 ஆம் ஆண்டு தீர்மானம் இயற்றியது. இந்த தீர்மானம் குறித்து இன்னும் முடிவு எடுக்காமல் கவர்னர் உள்ளதால் இது குறித்த வழக்கு ஒன்று பேரறிவாளன் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த வழக்கை விசாரணைக்கு வந்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்ய எடுக்கும் முடிவு மத்திய அரசின் கையில்தான் உள்ளது என வாதிடப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நடந்த விசாரணையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்தில் வழங்கப்படும் என்றும் பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்க ஒரு வார காலம் அவருக்கு அவகாசம் வழங்கப் படுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் 
 
அதற்குள் தமிழக ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்றால் பேரறிவாளன் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்படும் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்து டிக்கெட் Payement Fail ஆனால் அரை மணி நேரத்தில் பணம் ரிட்டர்ன்! - போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு!

நான் மோசடி செய்துட்டு ஓடினேனா? என்ன நடந்தது தெரியுமா? - முதல்முறையாக மனம் திறந்த மல்லைய்யா!

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments