Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி

Mahendran
திங்கள், 15 ஜூலை 2024 (13:35 IST)
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?சவுக்கு சங்கரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சவுக்கு சங்கர் தாயார் கமலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு  மனு  உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை வந்தது. இன்றைய விசாரணையின் போது சவுக்கு சங்கரை ஏன் இடைக்கால ஜாமீனில் விடுவிக்க கூடாது? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றத்திற்கு சவுக்கு சங்கரை விடுவித்தால்  பொது ஒழுங்கு கெடும் என தமிழ்நாடு அரசு தரப்பு பதில் அளித்தது. மேலும் சவுக்கு சங்கர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், குண்டர் சட்டத்தின் கீழான கைதுக்கு எதிரான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம்,சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?  என கேள்வி எழுப்பி இதற்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments