Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி

Mahendran
திங்கள், 15 ஜூலை 2024 (13:35 IST)
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?சவுக்கு சங்கரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சவுக்கு சங்கர் தாயார் கமலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு  மனு  உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை வந்தது. இன்றைய விசாரணையின் போது சவுக்கு சங்கரை ஏன் இடைக்கால ஜாமீனில் விடுவிக்க கூடாது? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றத்திற்கு சவுக்கு சங்கரை விடுவித்தால்  பொது ஒழுங்கு கெடும் என தமிழ்நாடு அரசு தரப்பு பதில் அளித்தது. மேலும் சவுக்கு சங்கர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், குண்டர் சட்டத்தின் கீழான கைதுக்கு எதிரான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம்,சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?  என கேள்வி எழுப்பி இதற்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments