Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்! 23 பேர் பலி

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (15:40 IST)
பாகிஸ்தானின் கைபர் பக்துலா  மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள  ராணுவத் தளம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 23 பேர் உயிரிழந்தனர்.
 

பாகிஸ்தானின் கைபர் பக்துலா  மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில்  ராணுவத் தளம் உள்ளது. இது ஆப்கானிஸ்தான் எல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள நிலையில்,  இந்த ராணுவ தளத்தின் மீது அதிகாலை தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், 23 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.  இதனையடுத்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments