Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

Mahendran
புதன், 25 டிசம்பர் 2024 (17:58 IST)
அஞ்சல் துறையின் நூல் அஞ்சல் சேவை மூலமாக ஏராளமானோர் பயன் பெற்று வந்த நிலையில், தற்போது திடீரென இரவோடு இரவாக அந்த சேவை நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அஞ்சல் துறை கல்வி மற்றும் வாசிப்பு பழக்கத்தை மக்களிடம் ஊக்குவிக்க நூல் அஞ்சல் சேவை என்ற சேவையை அறிமுகம் செய்தது. இந்த சேவைக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு இருந்தது என்பதும், ஐந்து கிலோ புத்தகங்களை அனுப்புவதற்கு வெறும் 80 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக புத்தக பதிப்பாளர்கள் ஏராளமான ஆர்டர்கள் பெற்று புத்தகங்களை அனுப்பி வந்த நிலையில், தற்போது திடீரென இரவோடு இரவாக நூல் அஞ்சல் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையின் இணையதளத்தில் கூட நூல் அஞ்சல் சேவை நீக்கப்பட்டுள்ளது என்றும், இது சில அஞ்சல் துறை ஊழியர்களுக்கு கூட தெரியவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த சேவையை திடீரென நிறுத்தப்பட்டதால் புத்தக பதிப்பு துறை மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் நூல் அஞ்சல் சேவையை தொடர வேண்டும் என்று புத்தக பதிப்பாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments