Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு அரசியல் ஆதரவு: இப்போதே வாக்கு கொடுத்த சுவாமி!!

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (12:51 IST)
ரஜினிக்கு அரசியலில் அவருக்கு தேவையான ஒத்துழைப்பு கொடுப்பேன் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

 
விரைவில் கட்சி தொடங்க போவதாக சில வருடங்களுக்கு முன்பே அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தொடர்ந்து படங்களில் நடித்தப்படியே அரசியல் நுழைவுக்கான பணிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் தனது மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ராகேவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.   
 
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சில விஷயங்களில் ஏமாற்றம் அடைந்திருப்பதாக கூறினார். ஆனால் அது என்ன விஷயம் என்பதை பிறகு கூறுவதாகவும் கூறினார். 
 
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சிஏஏ-வால் எந்த பிரச்னையும் இல்லை. யாருடைய குடியுரிமையும் பறிக்க போவதில்லை. இந்துக்கள் ஒற்றுமையை கெடுத்து, அதன் மூலம் நாட்டின் பெயரை கெடுப்பதற்காகவே சிலர் சதி செய்து வருகின்றனர்.
 
துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் எப்படி இந்து மதத்திற்காக குரல் கொடுத்தாரோ, அதேபோன்று எதிர்காலத்திலும் அவர் தொடர்ந்து பேசினால், அரசியலில் அவருக்கு தேவையான ஒத்துழைப்பு கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments