மாணவி பாலியல் விவகாரம் எதிரொலி: அண்ணா பல்கலை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்..!

Siva
ஞாயிறு, 5 ஜனவரி 2025 (13:16 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நேர்ந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம், மாணவ, மாணவிகள்  பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பணியாளர்களை மட்டுமே வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.

* பல்கலைக்கழக வளாகத்தில் வெளிநபர்கள் நடைபயிற்சி செய்ய தடை.

* மாலை, இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலர்கள் ரோந்து செல்ல வேண்டும்.

* வளாகத்தில் வெளிநபர்கள் வாகனங்களை நிறுத்த தடை. அவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

*  கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை நேரத்திற்கு பிறகு பல்கலைக்கழக வளாகத்தில் தங்கக்கூடாது.

* பல்கலைக்கழக வளாகத்தில் சிசிவிடி கேமரா, மின்விளக்குகள் சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

* பல்கலைக்கழக வளாகத்தில் வெளிநபர்கள் வாகனம் கண்டறியப்பட்டால் போலீசில் புகார் அளிக்க வேண்டும்.

* பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடி மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிய வேண்டும்.",
   

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்