Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திணறும் போலீசார்: பாளையங்கோட்டை சிறைக்கு ஆட்சித்தலைவர் வருகை!

திணறும் போலீசார்: பாளையங்கோட்டை சிறைக்கு ஆட்சித்தலைவர் வருகை!
, வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (16:45 IST)
பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முத்து மனோ (27) என்பவர் பலியானார். இவர், வெடிகுண்டு வைத்திருந்த வழக்கில் கடந்த 8ந்தேதி கைதாகி பாளை சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலியானார். 
 
இதையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறை முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதே போல் நெல்லை சீவலப்பேரியில் கோவில் பூசாரி ஒருவர் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து இப்படி சத்தமில்லாமல் அரங்கேறும் சாதிய கொலைகள் அங்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 
 
இதனால் அங்கு நான்கு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு வருகை தந்து அங்குள்ள மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பரவலை சமாளிக்க இந்தியாவுக்கு உதவி! – நேசகரம் நீட்டும் சீனா!