Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல இசையமைப்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு

பிரபல இசையமைப்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு
, வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (16:21 IST)
இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்த இரட்டையர்களான நதீம் ஷ்ரவன் ரத்தோட் நதிம்- ஷ்ரவன் ஆகிய இருவரில்  ஷ்ரவன் ரத்தோட் இன்று உயிரிழந்தார்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் யாரும் எதிர்பார்க்காமலேயே முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களில் இறப்பு என்பது மக்களையும் ரசிகர்களையும் வெகுவாக பாதித்துள்ளது.

அந்தவகையில், இந்திய சினிமாவில் முன்னணி இசை இரட்டையர்களாக இருந்தவர்க்ள் ஷ்ரவன் ரத்தோட் நதிம் – ஷ்ரவன். இவர்கள் ஆஷிக்கி, சாஜன், பர்தேஷ் உள்ளிட்ட பல வெற்றி பெற்ற படங்களுக்கு இசையமைத்தனர். இவர்களின் இசை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அத்துடன் அவர்களின் ஒவ்வொரு பாடலும் பட்டி தொட்டியெல்லாம் பாப்புலர் ஆனது.

இந்நிலையில், இசை இரட்டையர்களில் ஒருவரான ஷ்ரவன் ரத்தோட் திடீர் உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிந்து வந்த நிலையில், நேற்று  நள்ளிரவு அவர் காலமானார். இவரது மறைவு ரசிகர்களிடமும், சினிமாத்துறையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இசை இரட்டையர்களில் ஒருவரான ஷ்ரவன் ரத்தோட் இறந்த செய்தியை அவரது மகன் ரத்தோட் உறுதி படுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதியில் புதிய போட்டோ ஷூட் வைரல்...