Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர்ந்து பலாத்காரம் செய்தேன்!!! கோவை காமுகன் பகீர்

தொடர்ந்து பலாத்காரம் செய்தேன்!!! கோவை காமுகன் பகீர்
, திங்கள், 1 ஏப்ரல் 2019 (11:09 IST)
சிறுமியிடம் இதற்கு முன்னரே பல முறை அத்துமீறியுள்ளதாக கோவையில் சிக்கிய காமுகன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
 
கோவை அருகே ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், வெளிவந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது உறுதியானது. இது தமிழகமெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
குற்றவாளியை பிடிக்க போலீஸார் 10க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தியதில் சந்தோஷ்குமார் என்ற அயோக்கியன் சிக்கினான். இந்த கேடுகெட்டவன் தான் அந்த பிஞ்சுக்குழந்தையை நாசமாக்கியது.
 
விசாரனையில் அவன் அளித்த வாக்குமூலம், போலீஸாரையே அதிர வைத்துள்ளது. எனக்கு திருமணமாகிவிட்டது. கருத்துவேறுபாட்டின் காரணமான என் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அந்த சிறுமியின் வீட்டிற்கு அருகே தான் என் பாட்டி வீடும் உள்ளது. பாட்டியை பார்க்கும் வரும்போதெல்லாம் சிறுமியிடம் அத்துமீறுவேன்.
 
இப்பொழுதும் அதேபோல் சிறுமியிடம் அத்துமீறினேன். சிறுமி கத்தியதால் அவரை கழுத்தை நெறித்து கொலை செய்தேன் என கூறியுள்ளான். போலீஸார் அவனிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூட்டை மூட்டையாக வேலூர் சிமெண்ட் குடோனில் சிக்கிய பணம்: முக்கிய புள்ளிக்கு தொடர்பா?