Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி அரசுக்கு நன்றி! – மாணவிகளை சந்தித்த ஸ்டாலின் ட்வீட்!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (13:43 IST)
கோலமிட்டதற்கு கைது செய்து தமிழகத்தையே போர்க்கோலம் வரைய செய்த எடப்பாடி அரசுக்கு நன்றி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் கொண்ட கோலங்களை வரைந்ததற்காக மாணவிகள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கவனம் பெற்றது. அரசின் இந்த செயலை கண்டித்து திமுகவினர் தங்கள் வாசல்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய கோலங்களை வரைந்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் கோலமிட்டதற்காக கைது செய்யப்பட்ட மாணவிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்தனர். மாணவிகளின் முயர்சியை பாராட்டிய ஸ்டாலின் தனது ட்விட்டரில் ” மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர். ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது! எடப்பாடி அரசுக்கு நன்றி!” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments