Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டக்களத்தில் செல்பி ; பளார் விட்ட ஸ்டாலின் : வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (10:07 IST)
காவிரி நீர் தொடர்பாக நேற்று சென்னையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், செல்பி எடுக்க வந்தவரை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறைந்த வீடியோ வைரலாகியுள்ளது.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணாசாலையில் போராட்டத்தை துவக்கிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், வாலஜா சாலை வழியாக, மெரினாவில் உள்ள அண்ணா சமாதியை நோக்கி பேரணியாக சென்றார்.  அவருடன் இளங்கோவன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சென்றனர். 
 
அப்போது, அவருடன் ஒரு நபர் செல்பி எடுக்க முயன்றார். இதனால், ஆத்திரம் அடைந்த ஸ்டாலின், அவர் கன்னத்தில் பளார் என அறை விட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
 
தன்னிடம் செல்பி எடுக்க வந்த சிலரை ஸ்டாலின் கன்னத்தில் அறைந்த சம்பவங்கள் ஏற்கனவே நடந்து அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments