Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருடனையும், ஹெச்.ராஜாவையும் ஒன்றாக பார்த்தால்? - இளங்கோவன் கலகல பேட்டி

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (09:41 IST)
பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா பற்றி தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
செய்தியாளர் பேட்டிகளிலும், தனது டிவிட்டர் பக்கத்திலும் ஹெச்.ராஜா தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளையே கூறி வருகிறார். பெரியார் பற்றி அவர் தெரிவித்த கருத்து தமிழகமெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்பு அவர் அதற்கு வருத்தம் தெரிவித்தார்.
 
இந்நிலையில், மயிலாடுதுறையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் “காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை ஏமாற்றி வருகிறது. மூன்று வார காலத்திற்குள் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என தமிழிசை கூறியுள்ளார். பொய் சொல்வதே அவர்களுக்கு வழக்கமாகி விட்டது. ஐ.பி.எல் போட்டியை நிறுத்த வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. 
 
பெரியார் சிலை உடைப்பு விவகாரத்துக்கு பின் தமிழக மக்கள் திருடனையும், ஹெச்.ராஜாவையும் பார்த்தால், திருடனை விட்டுவிட்டு ஹெச்.ராஜாவை உதைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளனர். காவிரி விவகாரத்தில் ராகுல்காந்தி கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை” என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments