சோதனையை தொடர்ந்து நடத்துங்கள்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (18:23 IST)
திமுக மீதான வருமான வரி சோதனையை தொடர்ந்து நடத்துங்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
 
இன்று காலை முதல் திமுக பிரமுகர்கள் பலரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் கடந்த 12 மணி நேரமாக சோதனை நடந்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டவை என்னென்ன என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை
 
இந்த நிலையில் இன்று தேர்தல் பிரசாரம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் சோதனையைத் தொடர்ந்து நடத்துங்கள் என்றும் அப்போது தான் திமுக இன்னும் வலுப்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவரை நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சோதனையைத் தொடர்ந்து நடத்துங்கள் என ஸ்டாலின் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments