Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

6 மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
, வியாழன், 27 மே 2021 (14:02 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் தமிழக அரசும், தமிழக அரசின் சுகாதாரத் துறையும் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை காரணமாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது
 
இருப்பினும் சென்னையை விட கோவையில் அதிக பாதிப்பு இருப்பதாகவும் அதேபோல் திருச்சி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் அதிக பாதிப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் சற்று முன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கோவை திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆறு மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை என்றும் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு இந்த 6 மாவட்ட கலெக்டர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் இந்த 6 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு? காய்கறி பழக்கடைகளுக்கு அனுமதி!