Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்றுடன் நிறைவடையும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்.. ரிசல்ட் எப்போது?

Advertiesment
Student Exam

Siva

, செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (07:11 IST)
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் தேர்வுகள் நிறைவடைகின்றன. இந்த தேர்வுகளின் முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் மார்ச் 28ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்த தேர்வுகளை 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். மொழிப்பாடங்கள்,  கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், இன்று இறுதி தேர்வாக சமூக அறிவியல் பாடத் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த தேர்வுடன் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் முழுமையாக முடிவடைகின்றன. மாணவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் திருத்தும் பணிக்காக முகாம்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன. ஏப்ரல் 21ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மதிப்பீடு செய்வார்கள். அதன் பின்னர் மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு, மே 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!