Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலைக்கு கிரிவலம் போறீங்களா... 600 சிறப்பு பேருந்துகள் ரெடி!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (11:03 IST)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு மாதந்தோறும்பௌர்ணமியன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதற்காக சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதிலிருந்தும் இயக்கப்படும். மேலும் முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.

இந்த முறை அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை (அக்டோபர் 28) ஐப்பாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்காக தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

ரயில்வே துறையும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது. தற்போது போக்குவரத்து கழகமும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி சென்னையிலிருந்து சுமார் 300 பேருந்துகளும், தமிழ்நாட்டின் முக்கிய பகுதிகளிலிருந்து சுமார் 300 பேருந்துகளும் தினசரி பேருந்துகளோடு சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படவுள்ளது.<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிக்கலாம்! சென்னை பல்கலைக்கழகம் புதிய திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments