Publish Date: Sun, 02 Jul 2023 (18:04 IST)
Updated Date: Sun, 02 Jul 2023 (18:05 IST)
ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் சென்று வரும் நிலையில் இன்றைய பௌர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ளனர்.
திருவண்ணாமலையில் இன்று இரவு 7.42 மணி முதல் நாளை மாலை 5:46 வரை கிரிவலம் செல்லலாம் என்றும் இரவு நேரம் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
மேலும் இந்த மாதத்தின் பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுவதால் திருவண்ணாமலையில் ஏராளமான பொதுமக்கள் கிரிவலம் செல்ல வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் நடந்து வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.