வரப்போகுது செம மழை; குடை தயாரா? – எந்தெந்த மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு?

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (09:53 IST)
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக 29 மற்றும் 30ம் தேதிகளில் கனமழை பெய்ய உள்ளது.



தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை அவ்வபோது பெய்து வருகிறது. சமீபத்தில் வங்க கடலில் ஏற்பட்ட புயலை அடுத்து வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 29ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், விருதுநகர், தூத்துக்குடி, தேனி, மதுரை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், கோவை மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 30ம் தேதியன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், விருதுநகர், தூத்துக்குடி, தேனி, மதுரை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். கோவை சுற்று வட்டார பகுதிகள், புதுச்சேரியில் பரவலாக சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments