Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே துறையின் முடிவில் மாற்றம்??

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (14:07 IST)
தென்னக ரயில்வே துறை தகவல் பரிமாற்றத்திற்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த முடிவில் மாற்றம் வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது
ரயில்வே அதிகாரிகளிடையே தகவல் பரிமாற்றம் புரியாமல் போவதை தடுக்க, தமிழில் பேசக்கூடாது என்றும் ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே பேசவேண்டும் என தென்னக ரயில்வே துறை அறிவித்திருந்தது.

இந்த அறிக்கைக்கு தமிழக அளவில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது ரயில்வே துறையினர் அந்த அறிவிப்பில் மாற்றம் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தென்னக ரயில்வே துறை தற்போது வெளியிட்ட அறிக்கையில், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டும் பேச வேண்டும் என்ற முடிவில் மாற்றம் செய்திருப்பதாக கூறியுள்ளது.

மேலும் ரயில்வே அதிகாரிகளுக்குள், பிறருக்கு புரிகிற மொழிகளிலேயே பேசலாம் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments