Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேருந்து கட்டண உயர்வால் கூடுதலாக 2 கோடி வசூலை அள்ளிய தெற்கு ரயில்வே

பேருந்து கட்டண உயர்வால் கூடுதலாக 2 கோடி வசூலை அள்ளிய தெற்கு ரயில்வே
, செவ்வாய், 30 ஜனவரி 2018 (08:01 IST)
தமிழகம் முழுவதும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதன் காரணமாக, கடந்த ஒரு வாரத்தில் ரெயில்வேயிற்கு கூடுதலாக 2 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 19-ம் தேதி தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது.  சரியான முன்னறிவிப்பின்றி,  பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்களும், எதிர் கட்சி தலைவர்களும், மாணவர்களும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்
 
இதனால் மக்கள் பலர் பேருந்துகளில் பயணம் செய்வதை தவிர்த்து, ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.  ஜனவரி 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சென்னை புறநகர் ரயிலில் 7.95 லட்சம் பயணிகள் ரயில்களில் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். இதனால் ரயில்வே துறைக்கு கடந்த ஒரு வாரத்தில் கூடுதலாக ரூ.1.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.கே.நகரை மிஞ்சிய பார் கவுன்சில் தேர்தல்: ஐகோர்ட் நீதிபதி வேதனை