Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11ம் தேதி முதல் முன்பதிவில்லா ரயில் சேவைகள்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (10:02 IST)
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த முன்பதிவில்லா ரயில் சேவைகளில் சிலவற்றை மீண்டும் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கடந்த சில காலமாக கொரோனா பாதிப்பால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஜூலை 11ம் தேதி முதல் சில முன்பதிவில்லா ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருப்பதி – காட்பாடி ரயில் – திருப்பதியில் காலை 10.55 மணிக்கும், காட்பாடியில் இரவு 9.55 மணிக்கும் புறப்படும்.

விழுப்புரம் – மயிலாடுதுறை ரயில், விழுப்புரத்தில் மதியம் 2.25 மணிக்கும், மயிலாடுதுறையில் காலை 6 மணிக்கும் புறப்படும்.

விழுப்புரம் – புதுச்சேரி இடையேயான இரண்டு முன்பதிவில்லா ரயில்கள் விழுப்புரத்தில் காலை 5.30 மணிக்கு ஒன்றும், மாலை 5.50 மணிக்கு ஒன்றும் புறப்படும். மீண்டும் புதுச்சேரியிலிருந்து காலை 8.10 மணிக்கு ஒன்றும், மற்றொன்று இரவு 7.45 மணிக்கும் புறப்படும். இந்த ரயில் சேவைகள் ஜூலை 11 முதல் தினசரி செயல்படும்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments