Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மணி நேரம் தாமதமாக வரும் பாண்டியன், நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள்: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (09:01 IST)
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பாண்டியன், பொதிகை மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று 5 மணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் திருச்சி அருகே நடைபெற்று வரும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக தாமதமாக வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மேலும் திருச்சி தஞ்சை மயிலாடுதுறை விழுப்புரம் கரூர் ஆகிய பகுதிகளிலிருந்து முன்பதிவு இல்லாத ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது  
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக இன்று காலை 9:15 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுகிறது என்றும் இதனால் காலதாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் ரயிலே துறை விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments