Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென்மாவட்ட நிவாரண பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்: முதல்வர் ஸ்டாலின், உதயநிதி பங்கேற்பு..!

தென்மாவட்ட நிவாரண பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்: முதல்வர் ஸ்டாலின், உதயநிதி பங்கேற்பு..!
, வெள்ளி, 29 டிசம்பர் 2023 (13:55 IST)
தென்மாவட்ட நிவாரண பணிகள் குறித்த ஆய்வுக்கூட்த்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பங்கேற்றனர். இதுகுறித்து உதயநிதி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
 
அதிகனமழையாலும் - வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி - திருநெல்வேலி - கன்னியாகுமரி - தென்காசி மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின்  அவர்கள் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.
 
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு அமைச்சர்கள் - தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தற்போதைய கள நிலவரத்துக்கு ஏற்ப பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய நம் முதலமைச்சர் அவர்கள், அரசின்  நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்கள்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் நல்லடக்கம் செய்யப்படும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: போலீஸ் அறிவிப்பு