Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது… சூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய விசாரணை ஆணையம்!

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது… சூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய விசாரணை ஆணையம்!
, வியாழன், 6 மே 2021 (08:27 IST)
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா குறித்த முறைகேட்டை விசாரிக்கும் விசாரணை ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதில் இருந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் மீது சமீபத்தில் 208 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் என்பவரது தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது, அந்த விசாரணை ஆணையம் சூரப்பாவின் ஊழல்புகார் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூற்யிருந்ததது.

இந்நிலையில் இப்போது சூரப்பாவின் பதவிக் காலம் முடிந்துள்ள நிலையில் ‘இனிமேல் தன்னை விசாரிக்க முடியாது’ என அவர் கூறி வந்தார். ஆனால் அவர் எங்கு சென்றாலும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என நீதியரசர் கலையரசன் தெரிவித்துள்ளார். புகார் குறித்த விசாரணை 80% நிறைவு பெற்றுள்ளதாகவும், இன்னும் இரண்டு மூன்று பேரிடம் மட்டுமே இறுதிகட்ட விசாரணை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுவரை பல்கலைக்கழகத்தில் ஆணையம் கேட்ட ஆவணங்கள் அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இப்போது சூரப்பாவுக்கு கலையரசன் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் விசாரணை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ்மாக் கடைகள் 4 மணி நேரம் மட்டுமே! – காலையிலேயே குவிந்த மதுப்பிரியர்கள்!