Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்மந்தமாக என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை… ரஜினிகாந்த் சரண்டர்!

Advertiesment
அண்ணாத்த
, வியாழன், 22 ஏப்ரல் 2021 (17:48 IST)
ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்மந்தமாக பேசிய கருத்துக்கு தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம தொடர்பாக பத்திரிக்கையாளர் மத்தியில் பேசிய ரஜினிகாந்த் போராட்டத்தில் சமுகவிரோதிகள் புகுந்து விட்டனர் என கூறியது சர்ச்சையைக் கிளப்பியது.  இதையடுத்து அந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் ரஜினியின் கருத்து குறித்து விளக்கமளிக்க நேரில் ஆஜராக சொல்லி வலியுறுத்தியது. அனால் கொரோனா அச்சம் காரணமாக ரஜினிகாந்த் ஆணையத்தின் முன் ஆஜராகவில்லை.

இந்நிலையில் இப்போது அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு எதேச்சையாக நடந்தது என்றும் அது சம்மந்தமாக தான் பேசிய கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் ரஜினிகாந்த் எழுத்துப் பூர்வமாக எழுதிக்கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்து ஓடிடிக்கு செல்லும் விஜய் சேதுபதியின் 3 படங்கள்!