Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தையின் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி வெட்டிய மகன்

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (13:49 IST)
திருப்பூரில் தந்தையின் கள்ளக்காதலியை மகன் ஒருவர் ஓட ஓட நடுரோட்டில் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கள்ளக்காதல விவகாரத்தில் தொடர்ந்து கொலைகள் நடந்து வருகிறது. பெரும்பாலும் கணவன் மனைவியை கொலை செய்வதும், மனைவி கணவனை கொலை செய்வதும்தான் அரங்கேறி வந்தது. இந்நிலையில் தந்தையின் கள்ளக்காதலியை மகன் கொலை செய்ய முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் ஸ்ரீவித்யா நகர் பகுதியைச் சேர்ந்த துரை என்பவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அவருக்கு ரங்கநாயகி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
நாளடைவில் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த துரையின் மகன் அருண் தனது தந்தையிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால் துரை மறுத்துள்ளார். இதையடுத்து அருண் ரங்கநாயகியையும் எச்சரித்துள்ளார். 
 
ஆனால் இவர்களது கள்ளக்காதல் உறவு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று சாலையில் அருணுக்கும், ரங்கநாயகிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அருண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரங்கநாயகியை குத்த முயன்றார்.
 
ரங்கநாயகி கத்தியை தட்டிவிட்டு ஓடியுள்ளார். அருண் அதோடு விடாமல் ரங்கநாயகியை துரத்தி அவரது கையில் கத்தியால் குத்தினார். அக்கம் பக்கத்தினர் அருணை பிடித்து ரங்கநாயகியை காப்பாற்றினர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அருண் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments