Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ரயில் ஏசி பெட்டியில் பாம்பு; பயணிகள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (14:36 IST)
கோவையில் இருந்து சென்னை வந்த ரயிலில் ஏசி வசதி கொண்ட பெட்டியில் படுக்கையின் கீழ் பதுங்கியிருந்த பாம்பால்,  ரயிலில் பயணித்த பயணிகள் பீதி அடைந்தனர்.
கோவை - சென்னை சென்ட்ரல் இடையேயான சேரன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (12674) வழக்கம்போல் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. ரயில் சென்னை சென்ட்ரல் நிலையத்தை அடையவிருந்தபோது பி-3 ஏசி பெட்டியில் பயணி ஒருவர் அவரது உடைமைகளை எடுக்க முயன்றார். அப்போது படுக்கையின் கீழ் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்ததைக் கண்ட அவர், மரண பயத்தில் அலறி அடித்துக் கொண்டு ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு மற்ற பயணிகளும் அங்குமிங்கும் ஓடத் தொடங்கினர்.
 
பயணிகள் போலீஸுக்கு தகவல் கொடுத்த நிலையில், போலீஸார் வருவதற்குள் ரயில் நிலையமே வந்துவிட்டது.  இது குறித்து சென்னை பிரிவு ரயில்வே மேலாளர் கூறியதாவது ரயில் பெட்டியில் இருந்த பாம்பை அப்புறப்படுத்திவிட்டோம். ஆனால் அந்த பாம்பு எப்படி ஏசி ரயில் பெட்டிக்குள் வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments