Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பாம்பு: பெரும் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (11:54 IST)
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பாம்பு
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகளில் பாம்பு ஒன்று சிக்கியிருந்தது பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில்வே நிலையம் சப்வே அருகில் உள்ள நகரும் படிக்கட்டு இன்று காலை பழுதாகி நின்றதை அடுத்து அதனை பழுது செய்ய தொழில்நுட்ப பணியாளர்கள் வந்தனர்.
 
அந்த படிக்கட்டுக்களை தொழில்நுட்ப பணியாளர்கள் சோதனை செய்து பார்த்த போது 4 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று இறந்த நிலையில் இருந்ததால் தொழில்நுட்ப பணியாளர்கள்  அதிர்ச்சி அடைந்தனர்.
 
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் உயர் தொழில்நுட்ப வசதிகள் இருந்தும்,  எந்த நேரமும் தீவிர சோதனை இருந்தும், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் பிசியான இடமாக இருந்தும்  நகரும் படிக்கட்டுகளில் பாம்பு இருந்த சம்பவம், பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments