Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதா? ஐ.ஆர்.டி.சி. என்ன சொல்கிறது??

Arun Prasath
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (11:43 IST)
காசி மஹாகால் விரைவு ரயிலில் சிவனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதா? என்பது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. விளக்கம் அளித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் வாரணாசி, உஜ்ஜைன், ஜான்சி, கான்பூர் வழியாக  சிவன் ஸ்தலங்களை இணைக்கும் காசி மஹாகால் என்னும் சிறப்பு ரயில் ஒன்றை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த ரயிலில் ஏசி வசதியுடன் குறைவான சத்தத்தில் சிவன் பாடல் ஒலிக்கப்படுகிறது. மேலும் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ரயில் வாரத்திற்கு 3 நாட்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ரயிலில் பி-5 கோச்சின் 64 ஆவது இருக்கையை சிவனுக்காக ஒதுக்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இதனை ஐ.ஆர்.சி.டி.சி. மறுத்துள்ளது. ”ரயிலின் தொடக்க ஓட்டம் எந்த தடங்கலும் இல்லாமல் தொடர சிவன் புகைப்படம் வைத்து பூஜை செய்யப்பட்டது” என விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments