Publish Date: Mon, 23 Aug 2021 (17:02 IST)
Updated Date: Mon, 23 Aug 2021 (17:04 IST)
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் சிவசங்கர் பாபா தனக்கு ஆண்மை இல்லை என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை அருகே சர்வதேச பள்ளி ஒன்றை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சிவசங்கர் பாபா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடந்த போது தனக்கு ஆண்மை இல்லை என்றும் ஆண்மை இல்லாததனால் எப்படி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முடியும் என்றும் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்
ஆனால் சிவசங்கர் பாபாவுக்கு மகன் மகள் இருக்கையில் ஆண்மை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதிகள் அவருடைய வாக்குமூலத்தை புறக்கணித்து உள்ளதாக கூறப்படுகிறது