Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழம்பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்...

பழம்பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்...
, புதன், 25 ஏப்ரல் 2018 (16:29 IST)
பழம் பெரும் பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார்.

 
1950-களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு பாடல்களை பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. இதனால் இவரை மழலைக்குரல் பாடகி என அழைக்கப்பட்டார். கமல்ஹாசன் சிறுவனாக அறிமுகமான களத்தூர் கன்னம்மா படத்தில் இடம் பெற்ற ‘அம்மாவும் நீயே..அப்பாவும் நீயே’ என்ற பாடலை பாடியது இவர்தான். மேலும், இவர் பாடிய மியா மியா பூனைக்குட்டி, ஓ ரசிக்கும் சீமானே, கோழி ஒரு கூட்டிலே.. சேவல் ஒரு கூட்டிலே போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை ஆகும்.
 
முதுமை காரணமாக, கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மரணமடைந்தார்.  அவருக்கு வயது 87 ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பின் லேடனின் முன்னாள் மெய்க்காவலருக்கு உதவித்தொகை..