Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு! – திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (08:22 IST)
காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.



கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீர் திறந்து விடப்படாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மொத்தமாக குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் நீர் திறப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அறிவுறுத்திய அளவு தண்ணீரை கர்நாடகா தரவில்லை.

காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து விவசாய அமைப்புகள் இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த போராட்டத்திற்கு திமுக, தமிழக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துளனர். மேலும் இன்று கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவும் விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments