Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு! – திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (08:22 IST)
காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.



கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீர் திறந்து விடப்படாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மொத்தமாக குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் நீர் திறப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அறிவுறுத்திய அளவு தண்ணீரை கர்நாடகா தரவில்லை.

காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து விவசாய அமைப்புகள் இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த போராட்டத்திற்கு திமுக, தமிழக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துளனர். மேலும் இன்று கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவும் விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments