Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்களின் காலை சிற்றுண்டியில் பல்லி.. 14 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!

Siva
வியாழன், 6 பிப்ரவரி 2025 (15:01 IST)
நீடாமங்கலம் அருகே உள்ள பள்ளியில், காலை சிற்றுண்டி உணவில் பல்லி இறந்து கிடந்ததை பார்க்காமல் சாப்பிட்ட 14 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இன்று காலை மாணவ, மாணவியர்கள் காலை சிற்றுண்டியாக பொங்கல் மற்றும் சாம்பார் வழங்கப்பட்டது.

மாணவர்கள் சாப்பிட தொடங்கிய போது, உணவில் பல்லி இருப்பதை பார்த்து, தலைமை ஆசிரியர் உடனடியாக மாணவர்கள் சாப்பிடுவதை நிறுத்தினார். இதனை அடுத்து, மாணவர்கள் அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த தகவல் அறிந்து, மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் உடனே சம்பவ இடத்திற்கு நேரில் வந்தார். இது குறித்து விசாரணை செய்த அவர், மாணவ, மாணவிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும், இது குறித்து விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்சி மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு: வேங்கை வயல் அடுத்து இன்னொரு சம்பவம்..!

பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுனர்: 20 ஆண்டு சிறை தண்டனை ரத்து

ஏமாந்த மாணவர்களின் நிலை விவசாயிகளுக்கும் தொடரக் கூடாது: திமுக அரசு குறித்து அண்ணாமலை..!

BSNL, MTNLக்கு சொந்தமான ரூ.16 ஆயிரம் கோடி சொத்துகளை விற்க முடிவு! ஏன் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments