Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்களின் காலை சிற்றுண்டியில் பல்லி.. 14 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!

Siva
வியாழன், 6 பிப்ரவரி 2025 (15:01 IST)
நீடாமங்கலம் அருகே உள்ள பள்ளியில், காலை சிற்றுண்டி உணவில் பல்லி இறந்து கிடந்ததை பார்க்காமல் சாப்பிட்ட 14 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இன்று காலை மாணவ, மாணவியர்கள் காலை சிற்றுண்டியாக பொங்கல் மற்றும் சாம்பார் வழங்கப்பட்டது.

மாணவர்கள் சாப்பிட தொடங்கிய போது, உணவில் பல்லி இருப்பதை பார்த்து, தலைமை ஆசிரியர் உடனடியாக மாணவர்கள் சாப்பிடுவதை நிறுத்தினார். இதனை அடுத்து, மாணவர்கள் அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த தகவல் அறிந்து, மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் உடனே சம்பவ இடத்திற்கு நேரில் வந்தார். இது குறித்து விசாரணை செய்த அவர், மாணவ, மாணவிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும், இது குறித்து விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments