Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருநங்கைகளை கடத்தி செல்லும் ரவுடிகள்: பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

திருநங்கைகளை கடத்தி செல்லும் ரவுடிகள்: பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!
, வியாழன், 20 ஜூன் 2019 (15:15 IST)
சென்னையில் திருநங்கைகள் சிலரை தாக்கி ரவுடிகள் கடத்தில் செல்லும் சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை குன்றத்தூர் அருகே உள்ள கெழுத்தி பேட்டை பகுதியில் மகாலட்சுமி என்ற திருநங்கை ஒருவர் திருநங்கை பலரை கொத்தடிமைகலாக வைத்துக்கொண்டு பிச்சை எடுக்க செய்துள்ளார். 
 
இவர்களிடம் இருந்து தப்பிய ஏழு திருங்கைகள் காஞ்சிபுரம், குருவி மலைப் பகுதியில் இருக்கும் திருநங்கை நகரில் தஞ்சம் புகுந்தனர். இதை எப்படியோ கண்டுபிடித்த மகாலட்சுமி அந்த பகுதிக்கு ரவுடிகளுடன் சென்றுள்ளார். 
 
தப்பி வந்த திருநங்கைகளை மட்டுமின்றி அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மற்றுமொரு திருநங்கையயும் அரிவாள் வைத்து மிரட்டி, அங்கிருக்கும் மரத்தின் கிளைகள் வெட்டி, உங்களையும் இதே போல் வெட்டிவிடுவேன் எனவும் மிரட்டி அவர்களை காரில் கடத்தி சென்றுள்ளார். 
 
இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் இருக்கும் வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து போலீஸார் கடத்தப்பட்டவர்களை மீட்கவும், கடத்தியவர்களை கைது செய்யவும் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணை அடித்து விளாசிய ராட்டினம் – அதிர்ச்சி வீடியோ