Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களுக்கு ஷாக் நியூஸ் - “மீண்டும் உயரும் சொத்து வரி”..!

Senthil Velan
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (13:09 IST)
சென்னையில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகத்தில் கடந்த 2022 ஏப்ரல் 1ஆம் தேதி சொத்து வரி உயர்த்தப்பட்டது. சென்னையில் கடந்த முறை குடியிருப்புகளுக்கான சொத்து வரி 50%ல் இருந்து 150% வரை  உயர்த்தப்பட்டது. இடம், கட்டடத்தின் அளவை பொறுத்து வரியில் மாற்றம் செய்யப்பட்டது.
 
இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,  சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 6% வரை சொத்து வரி உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், ஆணையாளர் லலிதா, நிலைகுலு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


ALSO READ: செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல்.! "மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல்" - அன்புமணி ராமதாஸ்.!!
 
சென்னையில் சொத்து வரி மீண்டும் உயர்த்தப்பட இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து வரியை மீண்டும் உயர்த்த கூடாது என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

சிபில் ஸ்கோர் சரியாக இல்லை என்றால் வேலை கிடையாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பாராசிட்டாமல் உள்ளிட்ட 14 மருந்துகளுக்கு தடை! - கர்நாடக அரசு அதிரடி!

இருசக்கர வாகனங்களுக்கு இனி டோல்கேட் கட்டணமா? - NHAI அளித்த விளக்கம்!

நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளை கைவிடுகிறோம்: சிறப்பு விசாரணை குழு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments